
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிரான என் நிலைப்பாடு கட்சி அரசியல் நோக்கம் கொண்டதல்ல. ஆகவே எந்தவொரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ இந்நிலைப்பாட்டை நான் எடுக்கவில்லை. கட்சி சார்பற்ற புவிச் சூழல் பாதுகாப்பு, இந்திய மக்களரசு மக்களுக்காகச் செயல்படும் அரசாக மாறுவதற்கு வேண்டிய பொருளியல் இறையாண்மை போன்ற காரணங்களுக்காகவும், இந்தியத் துணைக் கண்ட மக்களின் பொருள் வளத்தை மூன்று நூற்றாண்டுகளாகச் சுரண்டி பல கோடி மக்கள் பஞ்சத்திலும் இனப் படுகொலையிலும் மாள்வதற்குக் காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியம் - இந்தியத் துணைக் கண்டத்தின் மேல் கோலோச்சியதற்கு நன்றி தெரிவித்ததன் மூலம் தன்னை ஏகாதிப்பத்தியத்தின் அடிவருடி என்று இந்தியப் பிரதமராக மன்மோகன் இங்கிலாந்திற்கு வருகை தந்த போது தன்னைக் காட்டிக் கொண்டு இந்திய மக்களின் தன்மானத்தைக் கப்பலேற்றிய அவர் (மன்மோகன் சிங்) - இந்திய நாட்டை ஏகாதிப்பத்திய சக்திகளிடம் அடகு வைக்க தயங்க மாட்டார் என்பதாலும், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக கட்சி சார்பற்று மனச்சாட்சிப்படி வாக்களிக்கும்படி மக்களவை உறுப்பினர்களை நாட்டுப் பற்றுள்ள (தமிழத் திராவிட) இந்தியக் குடிமகனாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.