Wednesday, 30 July 2008

Clarification of my comment on DMK:
































My comment in an earlier blog on DMK sellling out to the farce of the "Hindu" theo-socio-legal construct was not based on any partisan political reasons, but fundamentally based on the reason for the creation of the DMK itself ! Periyar believed that creating a political party for the Dravidian movement will dilute the cadre strength of the Dravidian movement that would serve for enacting a lasting psycho-social and socio-cultural revolution (such as destroying the caste system and allied socio-cultura and psycho-social aims) which are more important to create a fundamental change in Tamil (and Indian) society than partisan politics for material ends. This is why Periyar opposed forays into electoral politics and opposed the creation of a political party for the Dravidian socio-political peoples' movement!

Why terror strikes India? A sociological analysis.

CORRECTED VERSION 1 (I am sorry that spaces between words disappeared in the points of socio-legal information I annotated due to a "cut and paste" typographical error when I transferred the information from another blog of mine:)



Photos courtesy of the "Sydney Morning Herald":

The recent serial blasts have been planned to seriously heighten the fear factor and hatred felt by non-Muslims towards Muslims in India so that the non-Muslim people will vote for BJP in the coming elections and it is no coincidence that the bomb blasts happened specifically in BJP ruled states. Since the parliament election is a few months away, the BJP has decided to consolidate and concretize its vote bank by repeating the "Gujarat experiment" which is to engineer acts of violence against people and blame it on Muslims by engineering fabricated claims, so that non-Muslim people will feel insecure enough to vote for BJP again at the hustings for the parliament ! Otherwise, there can be no other explanation why the authorities looked the other way while bombs were planted "only" in BJP ruled states ! I wouldn't be surprised if these bomb blasts were carried out by cadres of the Hindu fascist Sangh Parivar itself for the aforesaid electoral aims ! Or more clandestinely, fringe extremist groups amongst some disgruntled Muslims radicalised by past pogroms and atrocities suffered by Muslims (such as in Gujarat 2002) may be actually bankrolled by Hindu fascist elements or Sanathanist bigots in the Indian establishment for this purpose ! (No wonder given these aforesaid factors, no bomb blasts are "solved" by the police and no culprits are brought to the book, once the hoopla caused by the violence achieves its electoral purposes for the Hindu fascist electoral masters!



As I have written previously last year when bombs exploded in Hyderabad, one has to look at who stands to electorally and politically gain from these explosions and all directions points at the BJP! I would not be surprised even if Sanathanist "twice born" elements in the Indian intelligence acted hand in glove with the Sanathanist bigots running the Hindu fascist movement or with their friends abroad to engineer these blasts so that non-Sanathanist Indian Dravidians (of Bahujan, Dalit and indigenous background) will hate their Indian Muslim brothers and sisters to sustain sectarianism in Indian nation and society so that the Sanathanists who divide and rule Indian Dravidians sustain their status as the ruling class of India.




The Sanathanist ruling class of India wants to sustain the division and dehumanisation of Indian Dravidians with the caste system (as "Shudras" and "Panchamas") and negation of their non-Sanathanist religious schools and identities of thought and conscience through the fraudulent imposition of the "Hindu" label on both the "twice born" Sanathanists and the non-Sanathanist Indian Dravidians thus divided and ruled by the Sanathanists, even though Indian Dravidians are not even (and cannot theologically be) elementary sacramental and scriptural members of the racio-exclusivist Sanathanist religion of the "twice borns" !! By posing Mulsims as the bogeyman, Sanathanists hope to entrench the Indian Dravidians in the division of the hierarchical caste system and the delusion of "Hinduism" when non-Sanathanist Indian Dravidians are not even (and banned from being) scriptural or sacramental members of the Vedic and Upanishadic Hindu Sanathanist religion (codified as Hinduism by the Hindu law), in order to keep Indian Dravidians in bickering with Indian Dravidian Muslims so that this divide and rule apartheid fraud of Sanathanist racists goes unchallenged! No wonder both the two sides of the Hindu fascist coin (the Congress and the BJP parties) are run by twice born Sanathanist bigots (and the rim of the Hindu fascist coin is run by the twice borns amongst the "leftists" in India, while political movements of Indian Dravidians such as the DMK sells out to this farce for electoral compulsions!
That is why I always ask for the following:


DO NOT LEGALLY IMPOSE THE HINDU LAW AND HINDU RELIGIOUS LABEL ON VARIOUS NON-SANATHANIST RELIGIONS AND RURAL FOLK RELIGIONS OF INDIA WHOSE INDIAN DRAVIDIAN MEMBERS ARE EXPLICITLY DENIED SACRAMENTAL AND SCRIPTURAL MEMBERSHIP IN THE SANATHANIST RELIGION (THAT IS LEGALLY CODIFIED AS HINDUISM) WHILE BEING DERIDED, DIVIDED AND RULED AS LOWER CASTES (SHUDRAS) AND OUTCAST UNTOUCHABLES (PANCHAMAS).

DISTINGUISH CASTE SYSTEM AND CASTE IDENTITIES AS BEING INDEPENDENT OF AN INDIAN DRAVIDIAN INDIVIDUAL'S RELIGIOUS CHOICE.

RECOGNISE THE CASTE SYSTEM AS AN APARTHEID SYSTEM IMPOSED ON OTHERS (NON-SANATHANIST INDIAN DRAVIDIANS) BY THE SANATHANISTS THROUGH THEIR SCRIPTURAL HINDU LAW, AND DO NOT EQUATE THE CASTE SYSTEM WITH A NON-EXISTENT AND FABRICATED RELIGIOUS LABEL CALLED "HINDUISM".

RECOGNISE ONLY BRAHMANS, KSHATRIYAS, VYSYAS, KAYASTHAS AND OTHER SUCH "TWICE BORN" TRIBES WHO HAVE EXCLUSIVE RIGHT FOR SACRAMENTAL AND SCRIPTURAL MEMBERSHIP IN SANATHANISM AS BEING THE ONLY MEMBERS OF THE SANATHANIST RELIGION, BY LEGALLY DEEMING THEM AS "SANATHANIST TRIBES".
ENACT A SECULAR CIVIL LAW FOR ALL THOSE WHO FOLLOW A NON - SANATHANIST RELIGION OR A RURAL FOLK RELIGION (EXCEPT FOR JEWS, MUSLIMS, CHRISTIANS, ZOROASTRIANS AND SANATHANISTS).

SCRAP ALL THE CURRENT HINDU LAW REGIMES THAT FRAUDULENTLY IMPOSE THE HINDU LAW AND HINDU RELIGION ON "ONE AND ALL" (EXCEPTING JEWS, MUSLIMS, ZOROASTRIANS AND CHRISTIANS) THAT CAUSE THE DESTRUCTION OF THE INDEPENDENT IDENTITIES OF NON-SANATHANIST INDIGENOUS RELIGIONS SUCH AS LINGAYATISM, BUDDHISM, JAINISM, DRAVIDIAN SAIVISM, DRAVIDIAN VAISHNAVISM, VALLALARISM, NARAYANA GURUVISM, AYYA PATHISM, ETC., THEREBY CAUSING THE CO-OPTION OF THE LATTER NON-SANATHANIST RELIGIONS TO THE BLANKET HINDU LABEL AND THE CASTE SYSTEM IMPOSED BY THE LEGAL BODY OF HINDU LAW COMPRISING OF VEDAS, UPANISHADS, SHRUTHIS AND SMIRUTHIS, INCLUDING MANUSMIRUTHI.

LEGALLY RECOGNISE THE INDEPENDENT RELIGIOUS IDENTITY AND STATUS OF EVERY NON-SANATHANIST RELIGION SUCH AS LINGAYAT VEERA SAIVITE RELIGION, VALLALARIST RELIGION, NARAYANA GURUVITE RELIGION, BUDDHISM, JAINISM, SIKHISM, MEI VAZHICHALAI RELIGION, DRAVIDIAN SAIVISM, DRAVIDIAN VAISHNAVISM., OR BY THEIR RELEVANT NAMES, ETC., BUT NEVER IMPOSE THE TERM HINDU OR HINDUISM ON THESE NON-SANATHANIST RELIGIONS.

GIVE INDEPENDENT RECOGNITION TO THE VERY MANY FORMS OF RELIGIOUS WORSHIP THAT EXISTS AMONGST DALITS, BAHUJANS AND INDIGENOUS PEOPLES WHICH DO NOT POSSESS A CODIFIED SCRIPTURAL THEOLOGY BY USING THE TERM "RURAL INDIGENOUS FOLK RELIGIONS", AND NEVER USE THE TERM HINDU OR HINDUISM TO REFER TO THE LATTER RELIGIONS OF BAHUJANS, DALITS AND ADIVASIS.

DO NOT ALLOW SNATHANIST BRAHMANS TO WORK AS PRIESTS IN THE TEMPLES OF NON-SANATHANIST RELIGIONS SUCH AS DRAVIDIAN SAIVISM, DRAVIDIAN VAISHNAVISM, OR TEMPLES OF RURAL FOLK RELIGIONS, BECAUSE THE THEOLOGY OF SANATHANISM HAS NOTHINGTO DO WITH THESE NON-SANATHANIST RELIGIONS.

NOTE: SANATHANIST BRAHMANS HAVE IMPOSED ON THEMSELVES A MONOPOLY ON PRIESTHOOD IN NON-SANATHANIST TEMPLES TO FOOL THE NON-SANATHANIST RELIGIONISTS INTO THINKING THAT BRAHMANS AND SANATHANISTS BELONG TO THE PARTICULAR NON-SANATHANIST RELIGION (WHEN THE TRUTH IS THAT SANATHANISTS PRACTICE ONLY SANATHANISM AT HOME), SO THAT THE PARTICULAR NON-SANATHANIST RELIGION CAN BE DESTROYED, CORRUPTED AND CO-OPTED WITH THE CASYE SYSTEM, SANSKRITISED, AND BROUGHT UNDER THE AUTHORITY OF SANATHANISTS.

SET UP A NATIVE INDIGENOUS RELIGIOUS COMMISSION SO THAT THE FOLLOWERS OF GREAT MANY RELIGIOUS SCHOOLS IN INDIA CAN APPLY AND GET LEGAL RECOGNITION FOR THEIR RELIGION THAT WILL BE INDEPENDENT OF SANATHANISM.

SCRAP THE TERMS HINDU AND HINDUISM FROMLEGAL TERMINOLOGY AND EXPLICITLY BAN ALL USAGE OF THESE TERMS.
RENAME THE HINDU TEMPLES AND ENDOWNMENTS BOARD AS"INDIGENOUS, RURAL AND FOLK RELIGIONS ENDOWMENTS BOARD".

AWARD AFFIRMATIVE ACTION FOR INDIAN DRAVIDIAN BAHUJANS (BCs) AND INDIAN DRAVIDIAN DALITS (SCs) AND INDIGENOUS DRAVIDIANS (STs), IRRESPECTIVE OF THEIR INDIVIDUAL CHOICE IN RELIGION WHICH THEY MAY CHOOSE FROM ANY ONE OF THE AFORESAID NON-SANATHANIST RELIGIONS OR INDIGENOUS RURAL FOLK RELIGIONS, CHRISTIANITY, ISLAM OR INDEED ATHEISM.

AND ONCE AGAIN, SCRAP THE TERMS HINDU AND HINDUISM FROM LEGAL TERMINOLOGY AND EXPLICITLY BAN ALL USAGE OF THESE TERMS.

Unless Indian Dravidians (Bahujans, Dalits and indigenous peoples) unite as one people by throwing off the caste system and assert their non-Sanathanist (non-Hindu) religions, thought and conscience by challenging the violation of the latter by the Hindu law and Hindu terminology, such terror attacks will continue in India to sustain the apartheid of the Sanathanist racist twice born rule by dividing and ruling Indian Dravidians through the fraudulent terms of "Hindu" and "Hinduism", and denying any elementary investment in the social welfare, health, education, housing, sanitation and human rights of the Indian people!

Tuesday, 29 July 2008

இன்றைய இனியனின் செய்தி அலசல் - News Analysis And Comment:

The following is a news report from today's "Asian Age" :


ATS checks if American's laptops hacked
By Dippy Vankani
Mumbai

July 28: Maharashtra's Anti-terrorist Squad (ATS), which is investigating the blasts said that they have not yet given a clean chit to Ken Haywood and his wife. The American couple was detained by the ATS after the Internet Protocol (IP) address of the mail sent to the country's security agencies minutes before the blast was traced to them. The police said that they did not find any record from Mr Haywood's laptop that could establish that he sent the message.


"We have sent the laptop for forensic tests at the laboratory in Kalina. We are awaiting its report," said Mumbai police commissioner, Hasan Gafoor.According to Mr Gafoor the signal of the email emanated from Mr Haywood's laptop used a wireless modem to connect to the Internet through a wifi network. "In a wifi network a user often gets to know the usernames of other people using the network. We are now trying to find out whether his IP was hacked by someone to send the email," Mr Gafoor said.


My comment - என் கருத்து:

அண்மையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்று, ஒரு முஸ்லீம் அமைப்பின் பெயரைப் (பொய்யாகக்) குறிப்பிட்டு குண்டுகள் வெடிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் எச்சரிக்கை செய்து இந்திய அரசின் பாதுகாப்புத் துறைகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு அமெரிக்கரின் மடிக்கணிணியிலிருந்து அனுப்பப்பட்டதென்று தெரிந்த பின்னும் ஏனந்த நபரைக் கைது செய்யவில்லை?


இந்திய மக்களிடையே பூசலையும் வன்முறையையும் உண்டாக்கி சனாதன மதவெறிச் சக்திகளைப் பலப்படுத்த மேற்கத்திய அய்ந்தாம் படையினர் முயல்வர் என்று பலவாண்டுகளாய் நான் எழுதி வருவதை இந்தச் செய்தி நிருபனைச் செய்கிறது. இதுவே அந்த நபர் முஸ்லீமாகவோ சனாதன இரு பிறப்பாளரல்லாத இந்தியத் திராவிடராகவோ இருந்திருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டு நையப் புடைக்கப்பட்டு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் அல்லவா?


Why wasn't the person (implicated in the news report given above) not arrested despite the technical evidence and fact that the email sent to pre-warn the security agencies of the serial blasts was sent from his laptop and the fact that no one else has used his laptop? This news confirms my earlier writings in the past that western intelligence agencies may be involved in destabilising and weakening India along sectarian lines by engineering blasts and violence to politically strengthen right wing Hindu fascist parties.


If this person had been a Muslim citizen or a non-Sanathanist Indian Dravidian there can be no doubt that he would have been arrested immediately and subjected to torture and arbitrary imprisonment under the NSA already!

Sunday, 27 July 2008

இன்றைய இனியனின் கருத்து





















நோயாளிகளுக்குத் தரப்படும் குறிப்புகள், மருத்துவப் பிரசுரங்கள், நோயாளிகளின் மருத்துவக் குறிப்புக்கள், சிகிச்சை விவரங்கள், பயிற்சி மருத்துவ மன்ற உரைகள், மருத்துவக் கல்வி ஏடுகள் மற்றும் வகுப்புகள் என அனைத்து மருத்துவச் சிகிச்சைச் செயல்பாடுகளையும் மருத்துவக் கல்விச் செயல்பாடுகளையும் முழுக்க முழுக்க தமிழில் செய்யும் வகையில் பாலியல் மற்றும் உறவியல் சிகிச்சை மருத்துவம் (Sexual and Relationship Therapy), பால்வினை மருத்துவம் (Genito-Urinary / Venereological Medicine), உளவியல் உரையாற்றுச் சிகிச்சை (Counselling Psychotherapy) ஆகிய துறைகளில் மருத்துவ மனைகள், மருத்துவ மய்யங்கள், மற்றும் முதுகலை அல்லது முதுகலைப் பட்டய நிலை மருத்துவக் கல்வி மய்யங்கள் ஆகியவற்றை நான் தமிழ் நாட்டில் ஏற்படுத்த முனைந்தால் தமிழக அரசும் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் ஆதரவு நல்குவார்களா?

Friday, 25 July 2008

No Blogging

Because I am travelling there will not be any blog today and tomorrow.

Thursday, 24 July 2008

தொழில் நுட்பப் பிழையால் இன்று பதிப்பிக்கப்பட்ட வலைப்பூக்களில் ஏற்பட்ட சொற் பிழைகளுக்கு வருந்துகிறேன். பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

இன்றைய இனியனின் கருத்து:




இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்ததிற்கு பலனாக அல்லது மாற்றாக பின் வருவனவற்றைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருந்தால் மகிழ்ச்சி.

பிற்படுத்தப்பட்ட இந்தியத் திராவிட மக்களின் இட ஒதுக்கீட்டை உயர் கல்வி நிறுவனங்களில் இல்லாமல் செய்யும் "கிரீமி லேயர்" அநீதியை நிரந்தரமாக ஒழிக்க அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வருவது.

சேதுத் திட்டத்தைச் செயல்படுத்தாமல் தடுக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி, திட்டத்தினை பாதை மாற்றாமல் செயல்படுத்துவது.

தமிழீழத் தமிழர் மீதும் தமிழக மீனவர் மீதும் சொல்லவொண்ணா மனித உரிமை மீறல்களையும் இனப் படுகொலையையும் நடாத்தி வரும் இலங்கை அரசுக்குத் இந்திய அரசு தரும் இராணுவ உதவிகளை முற்றிலும் நிறுத்துவது.

இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் அல்லது விடுதலைப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றச் சாக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது படுகொலைகளையும், பாலியல் வன்முறையையும், சித்திரவதையையும் நடாத்தி வரும் சிங்கள இனவெறி அரசப் பயங்கரவாதத்தை முற்றிலும் இலங்கை அரசு நிறுத்தும்படி செய்ய இந்திய மய்ய அரசு தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துவது.

நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்ததிற்கு பலனாக அல்லது மாற்றாக மேற்கூறிய பலன்களை "அரசியல் விலையாக" தி்.மு.க பெற்றிருந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் கூட்டாட்சித் தத்துவ அரசியல் விளை நிலத்தின் அறுவடைச் செயல்பாடான (மய்யக் கூட்டணி அரசின்) நம்பிக்கை வாக்களிப்பில் மய்யக் கூட்டணி அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததற்கு பலனாக - அரசியல் விலையாக தமிழ் நாட்டு மக்களின் மேற் கூறிய நலன்கள் முன்னிறுத்தப்படவில்லையென வரலாறு பேசிட வாய்ப்பிருக்கிறது என்பதை மிகப் பணிவுடன் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கட்குத் தெரிவிக்கத் தமிழனாகக் கடமைப் பட்டுள்ளேன்.

இனியனின் நேற்றைய கருத்து: (ஒரு நாள் தாமதமாக வெளிவருகிறது)


அரசு மருத்துவச் சேவைகளை நவீன கணிணி தொழில் நுட்பம் கொண்டு சிறப்பாக நிர்வகிக்கவும் செயல்படுத்தவும், ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவைகள் சிறப்பாகச் சேரவும் ஆவன செய்ய வேண்டும். தற்போதுள்ள படு மோசமான மருத்துவ அமைப்பினை அய்ரோப்பிய அரசு மருத்துவச் சேவைகளுக்கு ஈடாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு தேவையில்லாத ராணுவச் செலவுகளுக்கும் அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தம் போன்ற ஏகாதிப்பத்திய பகல் கொள்ளைக்கும் இந்திய மக்களின் பணத்தை மாயமாக்கக் கூடாது.

Tuesday, 22 July 2008

இன்றைய இனியனின் கருத்து:

























தொல் தமிழ் தலித் மக்கள், பழங்குடி மக்கள், நரிக் குறவர் போன்ற விளிம்பு நிலை மக்கள், மற்றும் நாட்டுப் புற மக்கள் ஆகியோரது இசை, கலைகள், பாரம்பரிய வாழ்வு முறைகள் ஆகியவற்றை எதிர்கால சந்ததியினர் என்றென்றும் தெரிந்து தம் மண்ணின் மக்களின் மாண்பை அறிந்து சிறக்க, தொல் மக்கள் பண்பாட்டுத் துறையும் (Ministry Of Indigenous Dravidian Tamil Culture) அது தொடர்பான ஆய்வு மய்யமும் காட்சியகமும் அரசால் நிறுவப்பபட வேண்டும். இம்மக்களின் கலைஞர்களுக்கும் அரசால் கலை மய்யங்கள் நிறுவப்பட்டு, அவர்கள் கலை வாழ்வு அரசுப் பணியாக தரப்பட்டு, அவர்களது கலைகளை மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கண்டு களிக்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் அரசுக் கலையரங்குகள் காட்சியகங்கள் நிறுவப்பட வேண்டும். நம் தொல் பண்பாட்டையும் கலைகளையும் எதிர்கால தலைமுறையினர் மறந்தால் அவர்கள் (தமிழினத்) தன்னுணர்வையும் மறந்து போவார்கள். இது அனைத்திந்தியாவிலுள்ள அனைத்து தொல்லினத் தமிழ் (திராவிட) மரபின மக்களுக்கும் பொருந்தும். இது தொடர்பாகத் தொல் கலைகளை மய்யப்படுத்தி தமிழக அரசு நடத்திய "சங்கமம்" நிகழ்வுகள் நல்லதொரு உவப்புக்குரிய துவக்கமாகும். ஆனால், இக் கலைகளுக்கு மேற்கூறிய வகையில் நிரந்தரமான அமைப்பு ரீதியான அரசு ஆதரவு இன்றியமையாதது.

Resuming my English blogging

My English blogging has resumed at www.iniyan.blogspot.com

Monday, 21 July 2008

படமும் செய்தியும்:

தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு தன் சொந்தப் பணமான கோடி ரூபாயை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கொடையாக வழங்கினார்



(நிழற் படம் : தினகரன் செய்தித் தாள்)

இன்றைய இனியனின் கருத்து :


இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிரான என் நிலைப்பாடு கட்சி அரசியல் நோக்கம் கொண்டதல்ல. ஆகவே எந்தவொரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ இந்நிலைப்பாட்டை நான் எடுக்கவில்லை. கட்சி சார்பற்ற புவிச் சூழல் பாதுகாப்பு, இந்திய மக்களரசு மக்களுக்காகச் செயல்படும் அரசாக மாறுவதற்கு வேண்டிய பொருளியல் இறையாண்மை போன்ற காரணங்களுக்காகவும், இந்தியத் துணைக் கண்ட மக்களின் பொருள் வளத்தை மூன்று நூற்றாண்டுகளாகச் சுரண்டி பல கோடி மக்கள் பஞ்சத்திலும் இனப் படுகொலையிலும் மாள்வதற்குக் காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியம் - இந்தியத் துணைக் கண்டத்தின் மேல் கோலோச்சியதற்கு நன்றி தெரிவித்ததன் மூலம் தன்னை ஏகாதிப்பத்தியத்தின் அடிவருடி என்று இந்தியப் பிரதமராக மன்மோகன் இங்கிலாந்திற்கு வருகை தந்த போது தன்னைக் காட்டிக் கொண்டு இந்திய மக்களின் தன்மானத்தைக் கப்பலேற்றிய அவர் (மன்மோகன் சிங்) - இந்திய நாட்டை ஏகாதிப்பத்திய சக்திகளிடம் அடகு வைக்க தயங்க மாட்டார் என்பதாலும், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக கட்சி சார்பற்று மனச்சாட்சிப்படி வாக்களிக்கும்படி மக்களவை உறுப்பினர்களை நாட்டுப் பற்றுள்ள (தமிழத் திராவிட) இந்தியக் குடிமகனாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Sunday, 20 July 2008

News Links :

News Links To Measles Vaccine Deaths In Mumbai Earlier This Year: மும்பையில் இவ்வாண்டு துவக்கத்தில் தரங்கெட்ட தடுப்பூசி மருந்து செலுத்தியதால் குழவியர் இறந்திட்ட நெஞ்சை உருக்கும் இணையச் செய்தி


Click on the links below:


Vaccine Deaths in Mumbai Prompt Government Probe

Measles vaccine deaths trigger panic in Mumbai

Baby given BCG vaccine dies

இணையச் செய்தி இணைப்புகள்

Click on the links below:



Vaccine shots kill 4 children



Killer measles vaccine on hold

இன்றைய இனியனின் கருத்து :
















தடுப்பு ஊசிகளால் அண்மையில் இந்தியாவின் பல பகுதிகளில் சிறார்கள் இறந்த போது, தரங் குறைந்த தடுப்பு ஊசி மருந்துகள் தயாரிக்கப்பட்டதா என்று கண்டறிந்து மருந்தைத் தயாரித்த நிறுவனர்களைத் தண்டிக்கவோ, அல்லது, முறையான பதப்படுத்தும் முறைகளில் தடுப்பு ஊசி மருந்துகள் பராமரிக்கப்படாமல் விடப்பட்டதா என்று அறிந்து சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகளைத் தண்டிக்கவோ, அல்லது வேறு மருத்துவ அறிவியல் காரணங்களைக் கண்டறியவோ, இவ்வாறு உண்மையைக் கண்டறிந்து உயிரைப் பறி கொடுத்த இளம் மலர்களுக்கு நீதி வழங்கும் வகையில் - நோய்த் தடுப்பு மருத்துவர்களும் (immunologists / microbiologists) நீதிபதிகளும் அடங்கிய விசாரணைக் குழு தேசிய அளவிலோ மாநில அளவிலோ அமைக்கப்படாதது ஏன்? தங்கள் கடமையை வெறுமெனச் செய்த மருத்துவர்கள் மேல் பழி சுமத்தி பணி நீக்கம் செய்தது ஏன் ? இது பற்றி ஊடகங்களும் கண்டு கொள்ளாதது ஏன்? இந்தியாவில் உள்ள சில அயோக்கிய மருத்துவ நிறுவனங்கள் தவறாக - தரமில்லாமல் - கலப்படத்துடன் உருவாக்கிய தடுப்பு ஊசி மருந்துகளைப் பயன்படுத்தியதால் கியுபா நாட்டிலும் சிறார்கள் கொல்லப்பட்டதாக கீ்ழ்க்கண்ட இணையச் செய்தி தெரிவிக்கிறது.

Click on the link below:








இளஞ் சிறார்களைக் கொன்று பிள்ளைக் கறி தின்று கோடிகளில் இலாபம் ஈட்டும் இந்த அயோக்கிய மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராக (ஒடுக்கப்பட்ட மக்களின் ஏழைச் சிறார்களின் உயிர்களைத் துச்சமென எண்ணி செயல்படும்) அதிகாரிகள் வர்க்கமும் - ஊடக வர்க்கமும் - அரசியல் வர்க்கமும் நடவடிக்கை எடுப்பார்களென எதிர்பார்ப்பது வீணே!

திருத்தம் 2

உடனடி சிகிச்சை வசதியின்மை பற்றிய கருத்தில் அதிகாரிகள் வர்க்கம், ஊடக வர்க்கம் மற்றும் அரசியல் வர்க்கம் மேல் பாய்ந்திருக்க வேண்டிய என் கருத்துக் கணை தட்டெழுத்துப் பிழையால் விட்டுப் போய் விட்டது. திருத்திய வரிகள் பின்வருமாறு :


சென்ற ஆண்டு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வங்காளத்தில் சாலை விபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது சைக்கிள் ரிக்-ஷா வண்டியில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற செய்தி கூட ஒளிப் பிம்ப போதையிலும் உலகமயமாக்கல் நாகரிகத்திலும் ஆழ்ந்து கிடக்கும் அதிகாரிகள் வர்க்கத்திற்கும் - ஊடக வர்க்கத்திற்கும் - அரசியல் வர்க்கத்திற்கும் - படித்த பணமுள்ள வர்க்கத்திற்கும் இந்த வெட்கமற்ற அவல நிலையை "உறைக்க" முடியவில்லை !

Saturday, 19 July 2008

இன்றைய இனியனின் கருத்து :


தமிழக மீனவரகளை தொடர்ந்து படுகொலை செய்து வரும் இனவெறி பிடித்த சிங்கள இராணுவத்தைக் கண்டித்தும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்கத் தவறும் இந்திய மய்ய அரசைக் கண்டித்தும் இன்று உண்ணா நிலைப் போராட்டம் நடத்திய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், இப்போராட்டத்தைத் துவக்கி நடத்திய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கட்கும் எனது வாழ்த்து !
(நிழற் படம் : தினகரன் செய்தித் தாள்)

Friday, 18 July 2008

இன்றைய இனியனின் கருத்து :




























உடனடி சிகிச்சை அமைப்புக்களும், உடனடி சிகிச்சை வாகனங்களும் உடனடி சிகிச்சை மய்யங்களும் இல்லாத நிலை இன்றும் இந்தியாவில் தொடர்வதால் உடனடி சிகிச்சையின்றி மாரடைப்பு, நஞ்சுடை விலங்கினத் தாக்குதல், சாலை விபத்து போன்றவற்றால் மக்கள் தொடர்ந்து மடிந்து வருவது அவமானத்திற்குரிய நிலையாகும் ! சென்ற ஆண்டு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வங்காளத்தில் சாலை விபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது சைக்கிள் ரிக்-ஷா வண்டியில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார் என்ற செய்தி கூட ஒளிப் பிம்ப போதையிலும் உலகமயமாக்கல் நாகரிகத்திலும் ஆழ்ந்து கிடக்கும் படித்த பணமுள்ள வர்க்கத்திற்கு இந்த வெட்கமற்ற அவல நிலையை "உறைக்க" முடியவில்லை !


Click on the links below:







Thursday, 17 July 2008

இன்றைய இனியனின் கருத்து: சாதி ஒழிப்பை நோக்கிய படிகள் - (முதல் பகுதி)


அமெரிக்காவில் சென்ற நுாற்றாண்டின் அறுபதாவது ஆண்டுகளில் ஆப்பிரிக்க மரபு வழி கறுப்பின மக்கள் வெள்ளையரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்விக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் சட்டப்படி தடை செய்யப்பட்டு, சட்டத்தின் சக்தியால் கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களும் ஓரிடத்தில் கலந்து வாழ வைக்கப்பட்டதைப் போன்று, இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் தாழ்த்தப்பட்ட தொல்தமிழ் மரபினரான தலித் மக்களைத் தனிமைப்படுத்தி "சேரி, காலனி", என்று பலவகைப் பெயர்களால் அழைக்கப்படும் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ வைக்கப் படுவது தடை செய்யப் பட்டு குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும். இத்துடன் மற்ற மக்கள் வாழும் நகரம் மற்றும் கிராமத்தின் மய்யப்பகுதிகளில் தலித் மக்கள் வாழ நவீன வீடுகள் கட்டித் தரப் பட வேண்டும். சாதிச் சமூகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ வைக்கப்படுவதால்தான் தலித் மக்கள் எளிதாகத் தாக்கப் படுகிறார்கள். இத்துடன் அனைத்து சாதி வழி (குலத்) தொழில்களைத் தடை செய்ய வேண்டும். அனைத்துச் சாதிப் பெயர்களையும் தடை செய்ய வேண்டும். வேலையில்லாதோர்க்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்க்கும் பாதுகாப்பு ஊதியம், உணவுப் பாதுகாப்பு மற்றும் அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி, வீட்டு வசதி ஆகியவை இலவசமாக கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.

Wednesday, 16 July 2008

கருத்தும் படமும் : கச்சத் தீவை மீட்க வேண்டும்!

இலங்கை ராணுவத்தின் தொடர் கொலை வெறிக்கு தமிழக மீனவர்கள் ஒரு நுாற்றாண்டாக மாண்டு வருவதைத் தடுக்க தமிழர்கள் சொரணை கொள்ள வேண்டும் ! கச்சத் தீவை மீட்க வேண்டும்!




Sunday, 13 July 2008

Photo News: Other news images of the masses who gathered for the "Pongu Tamil" meeting conducted yesterday in London:




Image courtesy tamilnet.com


Saturday, 12 July 2008

Photo News: படச் செய்தி:

தமிழில் தட்டெழுத நேரமில்லாததால் ஆங்கிலத்தில் சிறு குறிப்பு :

An elevated aerial view of the crowd that attended the "Pongu Tamil" event in London today, to assert the right to self rule of Eelam Tamils and calling for protection of Tamil human rights and justice for victims of past (and continuing covert) genocide. (Photo courtesy of the news website puthinam.com )


வாழ்த்துக்கள்

இன்று தம் தமீழீழத் தாயகத்தில் தன்னாட்சி உரிமையையும் மனித உரிமைகள் பேணுதலையும் வலியுறுத்தி "பொங்கு தமிழ்" நிகழ்வைக் கொண்டாடும் இலண்டன் வாழ் தமீழீழத் தமிழருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்

Tuesday, 8 July 2008

திருத்தம் - CORRECTION:

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றிய வலைப் பூவின் முதல் வரியில் "பல லட்சம் கோடி" என்று எழுதுவதற்குப் பதிலாக "பல லட்சம்" என்று தவறுலாக எழுதப்பட்டிருந்தது இப்பொழுது திருத்தப்பட்டுள்ளது.

எதிர்க் குறள் : "ஒப்புரவு ஒழித்தல்" - இனியனின் கவிதை

நகைப்பார் உலகார் என அஞ்சாமல் – மனம்

நகைக்க வாழ்தல் தலை


திகைப்பார் சுற்றார் என பதுங்காமல் – ஊர்

திகைக்க புகழாள்தல் முறை


வதைப்பார் மற்றோர் என ஒழியாமல் – அறிவு

விதைத்து வளர்த்தல் கலை


பழிப்பார் உற்றம் என அடங்காமல் – தீமை

அழித்தல் தலையான மறை


அஞ்சுவார் நண்பர் என ஒதுங்காமல் – பகுத்து

அஞ்சாமல் அறிவை வரை


ஒடுக்குவார் சமூகம் என மயங்காமல் – நீதி

தடுப்போரை மறுத்து உரை


அடிப்பார் எனவொடுங்கிடாமல் - காதல் நட்பை

எடுப்பதே வாழ்வின் விலை


முடிப்பார் வாழ்வை எனத் தாழாமல் – அறிவால் (கிளர்ந்து)

வெடித்திடு உரிமைத் தடை


மிதிப்பார் என்றெண்ணி நாணாமல் – சாதி

விதிப்போரை நையப் புடை


தடுப்பார் மாற்றார் எனத் தயங்காமல் – மகிழ்வின்

மடுப்பை வாழ்வில் விதை


நொடிப்பார் எனவஞ்சாமல் போடு – பிறருரிமை

ஒடுக்காமல் உரிமை நடை

சிறு அலசல் : இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்

பல இலட்சம் கோடி பெறுமானமுள்ள அணு உலைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்கி, அவற்றை இயக்க மீண்டும் பல லட்சம் கோடி பெறுமானமுள்ள அணு எரி பொருளை அமெரிக்காவிடம் என்றும் வாங்கிக் கொண்டு, இந்திய நாட்டைத் திவாலாக்கி, மக்களின் கல்வி, மருத்துவம், வீட்டு வசதி, சாலைகள், கழிவுச் சுகாதாரம், மலிவு விலை உணவுப் பண்டக (ரேஷன்) விநியோகம், வேலையில்லாதவர்க்கு பாதுகாப்பு ஊதியம், முதியோர்க்கு வாழ்வூதியம், போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை பன்னாட்டுத் தரத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் என்றுமே செயல் படுத்த முடியாத வகையில் மத்திய அரசிடம் பணம் இல்லாமல் செய்யும் வகையில், எதிர்கால இந்திய மக்களைத் தொடரந்து வறுமையி்ல், கல்வியின்மையில், நோயில் வைத்திருக்கக் கூடிய இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களையும் (மற்றும் இது போன்ற தேவையில்லாத இராணுவச் செலவுகளையும், விண்வெளித் திட்டச் செலவுகளையும்), இந்திய மைய அரசின் சனாதன அதிகாரிகளின் (இரு பிறப்பாளர்) வர்க்கமானது சனாதன அரசியல் வர்க்கம் (மற்றும்) ஊடக வர்க்கத்தின் துணையோடு தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது.




டென்மார்க், நார்வே, ஃபின்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகள் அணு உலைகளுக்கு செலவிடுவதில்லை, ராக்கெட் விடுவதில்லை, ராணுவத்திற்காகத் தேவையில்லாமல் செலவழிப்பதில்லை. ஆனால், மேற்கூறப்பட்ட அனைத்துத் தேவைகளையும் மக்களுக்கு அரசே செய்து கொடுத்து வளத்தில் வாழ வைக்கிறது. மேலும், இத்தகைய நாடுகளின் அரசுகள், போருக்கோ – இராணுவச் செலவுகளுக்கோ தேவையில்லாத வகையில் பிரச்சினைகளைத் தீர்த்து, அண்டை நாடுகளோடு ஒன்றியங்களை, கூட்டு அமைப்புக்களை வலுப்படுத்துகின்றன. ஆனால், இந்த நாடுகளில் இந்தியாவில் இருப்பது போல் மக்களைச் சாராத ஒரு ஆதிக்க இனம் ஆளும் அதிகார வர்க்கமாக இல்லை என்பதை உணர வேண்டும் !

இனியனின் சிறு கருத்து: வன்முறைக் கொலைக்கள அரசியல்வாதிகள் !

குண்டர்களாகச் செயல்பட்டு - ஒடுக்கப்பட்ட மக்கள் மீது மனிதத் தன்மையற்ற வன்முறையைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளாக வலம் வந்த சிலர் தமிழக அரசால் கைது செய்யப் பட்டிருப்பது நீதியைத் தாமதமாகத் தந்திட்டாலும், இத்தகைய குண்டர்கள் மீது குண்டர் சட்டமோ எந்த சட்டமோ இது வரை பாயாதது, இத்தகைய சாதி வெறி அல்லது மத வெறி அரசியல் பலம் உள்ள வன்முறைாளர்கள் - கொலைஞர்கள் முன் இந்திய சட்டமும், நீதியும் மண்டியிட்டு வணங்கும் என்பதையே காட்டுகிறது. இதற்கு மிக உச்சமான எடுத்துக் காட்டு - நரேந்திர மோடி.

கலைஞர் கவிதை ;





கலைஞர் கவிதை


புயல் வேகம், புது வேகம் கொள்வோம்!



சாதிக்கப் போவது யாரு?



சாதிக்கு அப்பாலே யாரோ; அவரு!



மதச் சார்பில்லா ஆட்சிக்குத் தான்மனிதநேய ஆட்சி என்று பேரு!



மத நல்லிணக்கம் காண்பதே நமக்கினி வேதம்;



மற்றவை யெல்லாம் நம்மிடை விளைக்கும் பேதம்!



மதம் சார்ந்த கட்சிகள் வாழ்வதற்கு உரிமை உண்டு;



அவைமனிதர்களை இருட் சிறையில் பூட்டுதற்கு உரிமை உண்டோ?



அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று;



அடியோடு இடித்தார் பாபர் மசூதி அன்று!



வருங்காலத் தமிழகத்தின் வளம் பெருகாமல் தடுத்திட



வரலாற்றைத் திரித்து சேது கப்பலுக்கு வழிவிட மறுக்கின்றார் இன்று!



இதையெல்லாம் எண்ணிப் பார்த்து;



இயல்பான பகுத்தறிவுக்கு மாறாக இயற்றிய சாத்திரங்களை



புயல் வேகம், புது வேகம் கொண்டுபுதைத்திடுவோம்;



ஆயிரம் அடி ஆழத்திலே!

தன்னிலை விளக்கம்:

நான் தமிழை நேசிப்பவன். தமிழர்களை நேசிப்பவன். மனிதத்தை நேசிப்பவன். காதலைக் காற்றாய்ச் சுவாசிப்பவன்.



தமிழகத் தமிழர்களாக இருந்தாலும், தமிழீழத் தமிழர்களாக இருந்தாலும், மலேசியத் தமிழர்களாக இருந்தாலும், சாதியால் ஒடுக்கப்படுகிற தொல் தமிழர்களாக இருந்தாலும், தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் வாழ்வுரிமை, மனித உரிமை, அரசியல் உரிமைகளுக்காக எனது எளிய எழுத்தை ஈந்த அடியார்க்கு அடியவன். தொண்டரடிப் பொடியவன்.



குறிப்பாக தமிழீழத் தமிழர்களின் தாயக மீட்புக்கான அரசியல் மற்றும் களப் போராட்டம் வெல்ல வேண்டும் என்ற நிலைப் பாட்டிலும், மற்றும் தமிழீழத் தமிழர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் நான் என்றும் உறுதியான மாறாத நிலைப்பாடு கொண்டவன். ஆனால் நான் எந்த இயக்கத்தையும் சார்ந்தவனல்ல.



இருப்பினும், சமூக - உளவியல், கலை-பண்பாட்டுத் தளங்களில் இருந்தும், சமயம் கடந்த தமிழர் (வட மொழியில் : திராவிடர்) தொல்லியல் அடிப்படையிலான தமிழ் மொழியினத் தன்ணுணர்வு அடிப்படையிலும், பெரியாரியல் - அம்பேத்கரியல் நோக்கிலும் - தமிழர் மேம்பாட்டிற்காகவும், வெற்றிக்காகவும் நான் கருத்துக்களைக் கூறிடும் போது, அதைத் தங்களுக்கு எதிரான கருத்தாக தமிழர்கள் சிலர் எண்ணிக் கொண்டால் அது அவர்களது அறியாமை !


இந்நிலையில், நான் சமூக அரசியல் கருத்துக்கள் குறித்து எழுதுவதை நிறுத்தி விட்டது ஏன் என்று சிலர் வினா எழுப்பி மடல் வரைந்திருக்கிறார்கள்.



நான் பொருள் – தொழில் வாழ்விலும், காதல் - அக வாழ்விலும், கலை - இலக்கிய ஆழ்விலும் முனைந்திருப்பதால் எனது எளிய சமூக அரசியல் எழுத்துக்களை நிறுத்தி வைத்திருக்கிறேன். இருப்பினும், தமிழ் மொழியினில் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் எளிய மருத்துவக் கையேடுகளைக் கொணர்ந்து தமிழை அறிவியல் மொழியாக ஆக்குவதற்கு என் பங்கையாற்ற செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர ஆங்கிலத்திலும் பெண்களுக்கான மருத்துவ இதழ் ஒன்றைக் கொணர முயன்று வருகிறேன்.




(குறிப்பு: திராவிடர் என்றச் சொல் அதன் வடமொழிப் பொருளான தமிழர் என்ற பொருள்படவே பயன்படுத்தப் படுகிறது. அதாவது தமிழர் என்ற சொல்லை ஆங்கிலத்தில் "டமிலியன்" (Tamilian) அல்லது "டமில்" (Tamil) என்று கூறுவதைப் போல வட மொழியில் "ட்ராவிட" (திராவிட) என்ற சொல் பயன் படுத்தப் படுகிறது. இது அம்பேத்கரியல் அடிப்படையிலான கூற்று. எனவே “திராவிட” என்றச் சொல்லை தென்னிந்தியர் என்ற பொருள்பட பயன்படுத்துவது தவறு.



தொல் தமிழ் பேசிய மொகஞ்சா தாரோ – ஹராப்பா நாகரீக மக்கள் துவங்கி ஆரியக் கலப்பால் தமிழ் மொழியை இழந்து புது மொழிகளைப் பெற்று விட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை தமிழ் தொல்லின வழி மக்கள் “people of Indian Tamilian racio-anthropological origin” என்றுதான் குறி்ப்பிட வேண்டும். இது அம்பேத்கரியல் அடிப்படையிலான கூற்று.